Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 09 Oct 2020 10:33:46 AM

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 52 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

virudhunagar district,corona virus,infection,death,treatment ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 47 ஆயிரத்து 466 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 599 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 3 ஆயிரத்து 681 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. 14 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.ஒரு முகாமில் 10 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 54 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன் தினம் 2,210 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை 3 ஆயிரத்து 681 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிராமப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

Tags :
|