Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சூரில் வருகிற நவ.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சூரில் வருகிற நவ.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sun, 19 Nov 2023 1:38:07 PM

திருச்சூரில் வருகிற நவ.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சூர் : குருவாயூர் ஏகாதசியை முன்னிட்டு திருச்சூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .... கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குருவாயூர் ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும், பாரம்பரிய மலையாள நாட்காட்டியின்படி டிசம்பர் மாதத்தில் குருவாயூர் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வருடம் குருவாயூர் ஏகாதசி வருகிற நவம்பர் 23 ஆம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.

holidays for schools and colleges,thrissur ,பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை,திருச்சூர்

இதனை அடுத்து இந்த ஏகாதசி அன்று யானை ஊர்வலத்துடன் புகழ்பெற்ற ஏகாதசி விளக்கு நடைபெறுகிறது. எனவே இதனை காண பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு.

இந்த நிலையில், ஏகாதசி தினத்தை முன்னிட்டு திருச்சூர் மாவட்டம் சாவக்காடு தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.

Tags :