Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் காரணமாக சென்னையில் முதற்கட்டமாக 24 விமானங்கள் சேவை ரத்து

புயல் காரணமாக சென்னையில் முதற்கட்டமாக 24 விமானங்கள் சேவை ரத்து

By: Monisha Wed, 25 Nov 2020 12:43:42 PM

புயல் காரணமாக சென்னையில் முதற்கட்டமாக 24 விமானங்கள் சேவை ரத்து

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹூப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக் கூடிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

storm,flights,cancellation,chennai airport,passengers ,புயல்,விமானங்கள்,ரத்து,சென்னை விமான நிலையம்,பயணிகள்

இதன்படி, தற்போது முதற்கட்டமாக 24 விமானங்கள் சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்ப கூடுதலாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே விமான சேவை குறித்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ள பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
|