Advertisement

கேரளாவில் அடுத்தடுத்து 24 முட்டை போட்ட கோழி

By: Monisha Tue, 14 June 2022 2:38:07 PM

கேரளாவில் அடுத்தடுத்து 24 முட்டை போட்ட கோழி

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் ஆலப்புழாவை அடுத்த புன்னம்புறாவை சேர்ந்த பிஜூ என்பவர் இங்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் சுமார் 25 கோழிகள் உள்ளன. நேற்று காலை பிஜூ, பண்ணையில் உள்ள கோழிகளை பார்வையிட்டபோது, ஒரு கோழி வித்தியாசமாக மண்ணை நோண்டிக்கொண்டிருந்தது. பின்னர் பிஜூ, அந்த கோழியின் காலில் எண்ணை தடவி விட்டார்.

சிறிது நேரத்தில் அந்த கோழி, மண்ணுக்குள் முட்டை இட தொடங்கியது. காலை 8.30 மணிக்கு முதல் முட்டை போட்டது. பின்னர், சிறிது நேரத்திற்கு ஒரு முறை முட்டை போட்டபடி இருந்தது. பிஜூ, அந்த கோழியை கண்காணித்தபடி இருந்தார். மதியம் 12.30 வரை சுமார் 6 மணி நேரம் அந்த கோழி முட்டை போட்டபடி, மொத்தம் 24 முட்டைகள் போட்டது. பின்னர், அந்த கோழி முட்டை போடுவதை நிறுத்தி கொண்டது.

kerala,hen,lays,24-eggs,6-hours ,கேரளா, கோழி, இடுகிறது, 24-முட்டைகள், 6-மணி

இந்த தகவலை கால்நடை மருத்துவ பல்கலை கழக அதிகாரிகளுக்கு பிஜூ தெரிவித்தார். அங்கிருந்து கோழி மற்றும் வாத்து பராமரிப்பு துறை உதவி பேராசிரியர் பினோஜ் சாக்கோ, கோழிப்பண்ணைக்கு சென்று கோழியை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கோழிக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தொடர்ந்து முட்டை போட்டிருக்கலாம் என கருதுகிறேன். என்றாலும் கோழியை அறிவியல் ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பின்பே 24 முட்டை போட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று கூறினார்.

Tags :
|
|
|