Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் புதியதாக 2,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதியதாக 2,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

By: vaithegi Sat, 15 Oct 2022 12:30:39 PM

இந்தியாவில்  புதியதாக 2,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

புதுடெல்லி: புதியதாக 2,430 பேருக்கு கொரோனா ... இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26,618- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,378- ஆக உள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

அதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,70,935- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றைக் கண்டறிய ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 41 ஆயிரத்து 707 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags :
|