Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 30 May 2020 11:53:10 AM

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 154-ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது.

tamil nadu,coronavirus,chennai,raipur,kodambakkam ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,ராயபுரம்,கோடம்பாக்கம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,678 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,437 பேருக்கும், அண்ணாநகரில் 1,143 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 1,425 பேரும், தேனாம்பேட்டையில் 1,500 பேரும், திருவொற்றியூரில் 414 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 816 பேருக்கும், பெருங்குடியில் 226 பேருக்கும், அடையாறில் 745 பேருக்கும், அம்பத்தூரில் 539 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 188 பேருக்கும், மாதவரத்தில் 298 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 233 பேருக்கும், மணலியில் 190 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|