Advertisement

இந்தியாவில் புதியதாக 249- பேருக்கு கொரோனா

By: vaithegi Fri, 09 Dec 2022 12:01:05 PM

இந்தியாவில் புதியதாக 249- பேருக்கு கொரோனா

புதுடெல்லி: புதியதாக 249- பேருக்கு கொரோனா உறுதி .... இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த பல வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 249- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,74,439- ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதையடுத்து கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,228- ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,653- ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,39,558-ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.96 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது.

Tags :
|