Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 24-ம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு விடுமுறை

வருகிற 24-ம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு விடுமுறை

By: vaithegi Sat, 11 Feb 2023 11:37:05 AM

வருகிற 24-ம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு விடுமுறை

விழுப்புரம் : விழுப்புரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். மேலும் மலையனூர் அங்காளம்மன் கோவிலானது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும்.

அத்துடன் மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.மேலும் சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவாசைக்கும் மேல் மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் வருகிற 24-ம் தேதி தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

villupuram,holiday ,விழுப்புரம் ,விடுமுறை

இதையடுத்து இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற .24-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வருகிற மார்ச் 4-ம் தேதியன்று வேலை நாளாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :