Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் உயிரிழப்பு

By: Monisha Fri, 10 July 2020 09:32:13 AM

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 73 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,169 பேர் உயிரிழந்துள்ளனர்.

chennai,corona virus,infection,treatment,death ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,உயிரிழப்பு

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Tags :