Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் புதியதாக 268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதியதாக 268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

By: vaithegi Thu, 29 Dec 2022 1:14:05 PM

இந்தியாவில் புதியதாக  268- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியா: புதியதாக 268- பேருக்கு கொரோனா .... இந்தியாவில் பிஎப்7 வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு ஏறத்தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த கொரோனா பாதிப்பு இந்த வர தொடக்கத்தில் மீண்டும் 200 ஐ தாண்டியது.
இதையடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:



corona,india ,கொரோனா ,இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3552- ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|