Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ..அமைச்சர் சிவசங்கர் தெரிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ..அமைச்சர் சிவசங்கர் தெரிவிப்பு

By: vaithegi Wed, 22 Nov 2023 10:30:16 AM

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ..அமைச்சர் சிவசங்கர் தெரிவிப்பு

சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் வருகிற 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும்.

வருகிற 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும். 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, சென்னையில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.

operation of special buses,minister sivasankar,tiruvannamalai,karthigai deepa festival ,சிறப்பு பேருந்துகள் இயக்கம்,அமைச்சர் சிவசங்கர்,திருவண்ணாமலை ,கார்த்திகை தீபத் திருவிழா

மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :