பீகாரில் ஓராண்டில் 283 குற்றவாளிகள் அதிரடிப்படையால் கைது
By: Nagaraj Sat, 07 Jan 2023 9:16:11 PM
பாட்னா: பீகாரில் 2022ம் ஆண்டு முழுவதும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், தேடப்படும் குற்றவாளிகள் 283,தேடப்படும் பட்டியலில் உள்ள 6 நக்சலைட்டுகள் என மொத்தம் 57 நக்சலைட்களை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பாட்னா நகர ஏ.டி.ஜி.யான காவல் துறை உயரதிகாரி கங்வார் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது: பீகாரில் 2022ம் ஆண்டு முழுவதும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், தேடப்படும் குற்றவாளிகள் 283,தேடப்படும் பட்டியலில் உள்ள 6 நக்சலைட்டுகள் என மொத்தம் 57 நக்சலைட்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 14 ஆயுதங்கள், 3 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஒரு
ஏகே 56 ரக துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் போலீஸாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5
ஆயுதங்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பீகார்
தவிர, உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா,
மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து 33
நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.