Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகாரில் ஓராண்டில் 283 குற்றவாளிகள் அதிரடிப்படையால் கைது

பீகாரில் ஓராண்டில் 283 குற்றவாளிகள் அதிரடிப்படையால் கைது

By: Nagaraj Sat, 07 Jan 2023 9:16:11 PM

பீகாரில் ஓராண்டில் 283 குற்றவாளிகள் அதிரடிப்படையால் கைது

பாட்னா: பீகாரில் 2022ம் ஆண்டு முழுவதும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், தேடப்படும் குற்றவாளிகள் 283,தேடப்படும் பட்டியலில் உள்ள 6 நக்சலைட்டுகள் என மொத்தம் 57 நக்சலைட்களை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் பாட்னா நகர ஏ.டி.ஜி.யான காவல் துறை உயரதிகாரி கங்வார் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது: பீகாரில் 2022ம் ஆண்டு முழுவதும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், தேடப்படும் குற்றவாளிகள் 283,தேடப்படும் பட்டியலில் உள்ள 6 நக்சலைட்டுகள் என மொத்தம் 57 நக்சலைட்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

adg of patna city,bihar,patna,press conference , செய்தியாளர் சந்திப்பு, பாட்னா, பாட்னா நகர ஏடிஜி, பீகார்

அவர்களிடம் இருந்து 14 ஆயுதங்கள், 3 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஏகே 56 ரக துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் போலீஸாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 ஆயுதங்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பீகார் தவிர, உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து 33 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
|
|