வெளிநாடுகளில் சிக்கி தவித்த 283 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
By: Nagaraj Sun, 09 Aug 2020 10:11:16 AM
இந்தியா மற்றும் மாலைத்தீவு நாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் 283 பேர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 283 பேர் நேற்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவிற்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 123பேர் நேற்று நாடு திரும்பினர்.
இவர்கள்
இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து மத்தள விமான
நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். அதேபோன்று மாலைத்தீவு சென்று நாடு
திரும்ப முடியாமல் இருந்த 163 பேர் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில்
குறித்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.