Advertisement

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 288 பேர் பலி

By: Nagaraj Mon, 29 June 2020 3:11:04 PM

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 288 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 288 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை ஒரு கோடியே 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 55 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது.

america,corona,death toll,increase ,அமெரிக்கா, கொரோனா, பலி எண்ணிக்கை, அதிகரிப்பு

குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 125,768 ஆக உள்ளது. உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது நான்கில் ஒரு பங்காகும்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 2,500,419-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|