Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி அரசு விடுமுறை

தமிழகத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி அரசு விடுமுறை

By: vaithegi Thu, 20 July 2023 11:38:33 AM

தமிழகத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி அரசு விடுமுறை

சென்னை: வருகிற ஜூலை 29 ஆம் தேதி அரசு விடுமுறை .... இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக மிகப் புனித பண்டிகையாக மொஹரம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அதாவது, இஸ்லாமிய மாதத்தின் துவக்க நாளாக மொஹரம் பண்டிகையை துக்க நாளாக தரிசித்து இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் நேற்று மொஹரம் மாத பிறை தென்படாத காரணத்தினால் வருகிற ஜூலை 20-ஆம் தேதி மொஹரம் மாத முதல் பிறை என நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

government holiday,moharram festival ,அரசு விடுமுறை ,மொஹரம் பண்டிகை

இந்த நிலையில், தமிழகத்தில் முறைப்படி ஜூலை 29ஆம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்து உள்ளார்.

எனவே தமிழகத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜூலை 29ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொஹரம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :