Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Fri, 18 Aug 2023 11:04:53 AM

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி : ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா . மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன்,

முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

local holiday,nilgiris ,உள்ளூர் விடுமுறை,நீலகிரி


இதையடுத்து அந்த வகையில் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 29 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து விடுமுறையை ஈடு செய்ய வருகிற செப்டம்பர் 16 பணிநாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது..

Tags :