Advertisement

பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

By: vaithegi Wed, 18 Oct 2023 3:27:36 PM

பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் காலாண்டு விடுமுறை முடிவடைந்து பள்ளி திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஆயுத பூஜையை முன்னிட்டு மீண்டும் விடுமுறை வரவுள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆயுத பூஜையை முன்னிட்டு வருகிற அக்.22 ஆம் தேதி முதல் அக்.24 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vacation,school education department ,விடுமுறை ,பள்ளிக்கல்வித்துறை

இந்த விடுமுறை முடிவடைந்து சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை துவங்கிவிடும்.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை கூடிய விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :