மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
By: vaithegi Wed, 17 Aug 2022 09:22:46 AM
மும்பை: மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதை அடுத்து இந்த நிலநடுக்கம் மிக அதிகமாக ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது.
மேலும் இந்த நிலநடுக்கம் நேற்று இரவு சுமார் 08.58 09.34 மற்றும் 09.42 மணி அளவில் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் முறையே 3.4, 2.1 மற்றும் 1.9 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் பற்றி தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .
எனவே அதன்படி இந்நிலநடுக்கத்தின் மையம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி பகுதியில் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Tags :