இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளது - பிரதமர் மோடி
By: Karunakaran Sat, 15 Aug 2020 2:06:28 PM
இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் மோடி உரையாற்றியபோது, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம் எனவும், இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலே பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும் எனவும், நம் நாட்டிற்காக போராடி கொண்டிருக்கும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.
தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன. இந்த தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் அனுமதி கொடுத்தவுடன் நாட்டில் மிகப்பெரிய அளவில் இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.