Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா தவிர அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை

புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா தவிர அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 14 July 2022 6:12:52 PM

புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா தவிர அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை

இந்தியா: இந்தியாவில் பருவமழை மிக தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மும்பை, புனே உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

holiday,pune ,விடுமுறை ,புனே

தற்போது புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்கள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர், பாராமதி, டவுண்ட், ஷிரூர் மற்றும் புரந்தர் ஆகிய தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகள் மட்டும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த உத்தரவு இன்று (ஜூலை 14) வியாழன் முதல் சனிக்கிழமை (ஜூலை 16) வரை கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பள்ளிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதால்

Tags :