Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 3 நாள் விடுமுறை

டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 3 நாள் விடுமுறை

By: vaithegi Fri, 08 Sept 2023 2:15:39 PM

டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 3 நாள் விடுமுறை

டெல்லி: டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் உச்சி மாநாட்டின் பாதுகாப்பு மற்றும் சுமூகமான நடவடிக்கைகளை உறுதி செய்யும் நோக்கில் பொது விடுமுறை விடப்பட்டு உள்ளது.

அதாவது வருகிற செப்டம்பர் 8ம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

holiday,delhi,g20 summit ,விடுமுறை,டெல்லி, ஜி20 உச்சிமாநாடு

சாதாரண பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இந்த விடுமுறை விடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது மட்டுமில்லாமல் அலுவலகங்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அது மட்டுமில்லாமல் டெல்லி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1954 இன் பிரிவு 16 (3) (i) இன் படி, புது தில்லி காவல் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்குள் அமைந்துள்ள அனைத்து வணிக மற்றும் வணிக நிறுவனங்களும் இத்தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என்று வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Tags :
|