Advertisement

ஜெய்ப்பூரில் இன்று 3 முறை நில அதிர்வு

By: vaithegi Fri, 21 July 2023 10:16:34 AM

ஜெய்ப்பூரில் இன்று 3 முறை நில அதிர்வு

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணி முதல் 4.25 மணிக்கு இடைப்பட்ட கால அவகாசத்தில் 4.4, 3.1, 3.4 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டது .... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் அத்துடன் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 4:22 மணிக்கு அடுத்த மூன்று நிமிடங்களில் மூன்றாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.

earthquake,jaipur , நில அதிர்வு,ஜெய்ப்பூர் ,நிலநடுக்கம்

இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.இதையடுத்து இது குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசந்தரா ராஜே ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை .

Tags :