Advertisement

தனியார் நிறுவனத்தில் மோசடி செய்ததாக 3 ஊழியர்கள் கைது

By: Nagaraj Sun, 10 Sept 2023 4:42:36 PM

தனியார் நிறுவனத்தில் மோசடி செய்ததாக 3 ஊழியர்கள் கைது

தூத்துக்குடி: மோசடி செய்ததாக ஊழியர்கள் கைது... தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஹார்பர் பகுதியில் டீனோஸ் லோகநாதன், அவரது சகோதரர் அரிஸ்டோ லோகநாதனுடன் இணைந்து இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வந்த சிவசந்திரபோஸ் என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2021ம் ஆண்டு வேலையிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பின்னர், பாக்கியராஜ் மேலாளராகவும், செல்வகுமார் துணை மேலாளராகவும் நியமிக்கப்பட்னர். அதன்பின்னர், நிறுவன கணக்குகளை சரிபார்த்த போது, பாக்கியராஜ், செல்வகுமார் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்ட சிவசந்திரபோஸ் உடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலியான நிறுவனத்திற்கு பணம் அனுப்பி அந்த நிறுவன கணக்கிலிருந்து தங்களது உறவினர்களின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Tags :
|
|