Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு ..ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த மேலும் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு ..ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த மேலும் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

By: vaithegi Thu, 30 Nov 2023 3:00:41 PM

அதிமுக பொதுக்குழு  ..ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த மேலும் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு


சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் கடந்த மாதம் 05ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோரின் அமர்வில் கடந்த 28-ம் தேதி மேல்முறயீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு விவகார வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் 1 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

aiadmk general committee,supreme court ,அதிமுக பொதுக்குழு ,உச்சநீதிமன்ற


இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மேலும் 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள பி.மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்தியலிங்கம்,

ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அடுத்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களுடன் இந்த மனுக்களும் விசாரணைக்கு வருகிறது.




Tags :