Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்

By: Nagaraj Wed, 19 Oct 2022 5:08:11 PM

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்

கேதார்நாத்: ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி... கேதார்நாத்க்கு புறப்பட்டுச் சென்ற போது ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கேதார்நாத்திலிருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

helicopter crash,chennai,involved,uttarakhand,police ,ஹெலிகாப்டர் விபத்து, சென்னை, சேர்ந்தவர்கள், உத்தரகாண்ட், போலீசார்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை, அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :