Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவிலும் 3 பேர் வைரசால் பாதிக்கப்பு... எச்சரிக்கை விடுத்த மருத்துவ சங்கம்

இந்தியாவிலும் 3 பேர் வைரசால் பாதிக்கப்பு... எச்சரிக்கை விடுத்த மருத்துவ சங்கம்

By: Nagaraj Sat, 24 Dec 2022 7:18:04 PM

இந்தியாவிலும் 3 பேர் வைரசால் பாதிக்கப்பு... எச்சரிக்கை விடுத்த மருத்துவ சங்கம்

புதுடில்லி: சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி கொண்டு வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்து விட்டது.இதையடுத்து இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்புதிய வகை கொரோனா, இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. இதனை அடுத்து இது தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

indian medical association,guidance ,இந்திய மருத்துவ சங்கம் ,அறிவுறுத்தல்

பிரதமர் மோடி கொரோனா நிலைமை பற்றி நேற்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கமும் பொதுமக்களுக்கு பல அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.


இந்திய மருத்துவ சங்கம் விடுத்துள்ள அறிவுறுத்தலில், திருமணம், அரசியல் நிகழ்வுகள், சமூக கூட்டங்கள் என பொதுஇடங்களில் மக்கள் தேவையின்றி கூட வேண்டாம் என்றும், சர்வதேச நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுமாறும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதோடு கொரோனா முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Tags :