Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேர் குண்டா் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேர் குண்டா் சட்டத்தில் கைது

By: Nagaraj Tue, 11 July 2023 09:17:55 AM

கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேர் குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை பட்சண அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் ஐயப்பன் என்கிற தனபால் (40). கட்டடத் தொழிலாளி. இவா், அப்பகுதியில் கடந்த மே மாதம் முன் விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாா்.

thug act,arrest,3,collector,order ,குண்டர் சட்டம், கைது, 3 பேர், கலெக்டர், உத்தரவு

இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தியாகராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் சுந்தா் (27), முத்துப்பிள்ளை மண்டபம் பாரதி நகரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அழகா்சாமி (22), ராவணன் மகன் சரண்ராஜ் (22) உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், சுந்தா், அழகா்சாமி, சரண்ராஜ் ஆகிய 3 பேரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் செய்யுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டாா். இதன் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :
|
|