Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை,திங்கட்கிழமை என தொடர் விடுமுறை ... ஆம்னி பஸ்களின் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை,திங்கட்கிழமை என தொடர் விடுமுறை ... ஆம்னி பஸ்களின் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

By: vaithegi Fri, 12 Aug 2022 2:59:54 PM

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை,திங்கட்கிழமை  என தொடர் விடுமுறை  ...   ஆம்னி பஸ்களின் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

சென்னை: சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் மேலும் சுதந்திர தின விழா 15–ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. எனவே இவ்வாறு தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் என பலர் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

இதனால் காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது. இதனையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பஸ் கட்டணமும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

எனவே அதன்படி, வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை அடுத்து கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு 4000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் உமறு வெளியாகி உள்ளது. இ தொடர்ந்து ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்வால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :