Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் வெடிகுண்டு பீதியால் 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்

ரஷ்யாவில் வெடிகுண்டு பீதியால் 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்

By: Nagaraj Sun, 23 Apr 2023 10:07:45 PM

ரஷ்யாவில் வெடிகுண்டு பீதியால் 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்

ரஷ்யா: மக்கள் வெளியேற்றப்பட்டனர்... ரஷ்யாவில் வெடிகுண்டு பீதியால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெல்கோரோட் என்ற நகரில் ரஷ்ய போர் விமானம் தவறுதலாக வெடிகுண்டை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர்.

missing,bombing,plane,people,evacuation,russia ,தவறுதல், குண்டு வீச்சு, விமானம், மக்கள், வெளியேற்றம், ரஷ்யா

இதற்காக அப்பகுதியில் உள்ள 17 அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை வெளியேற்றினர்.

பின்னர், காலி மைதானத்தில் அந்த வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர். கடந்த வியாழன்று ரஷ்யாவின் சுகோய் 34 ரக விமானம் பெல்கோரோட் நகர் மீது தவறுதலாக குண்டு வீசியதில் 3 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

Tags :
|
|