Advertisement

திருவண்ணாமலைக்கு 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Wed, 23 Nov 2022 1:06:31 PM

திருவண்ணாமலைக்கு 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


திருவண்ணாமலை: சிறப்பு பேருந்துகள் இயக்கம் .... திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் தமிழ் மாதமான கார்த்திகையில் வரக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். நடப்பு ஆண்டு திருக்கார்த்திகை விழா வரும் டிசம்பர் 6ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

எனவே இதை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வரும் 27ம் தேதி கொடியேற்றப்படவுள்ளது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமடைந்துள்ளது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். இவர்களுக்கு உதவியாக திருவண்ணாமலைக்கு 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

thiruvannamalai,special buses ,திருவண்ணாமலை,சிறப்பு பேருந்துகள்

மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் டிச.6 மற்றும் 7 ஆகிய 2 தினங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், உணவு போன்றவற்றிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அன்னதானம் அளிக்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கு வரும் நவம்பர் 26 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :