நடப்பு ஆண்டு நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்
By: Nagaraj Thu, 23 Feb 2023 11:19:22 AM
நியூயார்க்: நடப்பு ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உள்ளிட்டோர் இந்த ஆண்டுக்கான அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களில் பட்டியலில் உள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு அதிகபட்சமாக 376 நபர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Tags :
peace |