Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3095 பேருக்கு கொரோனா

By: vaithegi Fri, 31 Mar 2023 11:13:12 AM

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3095 பேருக்கு கொரோனா

இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரங்களில் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,095 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

india,corona ,இந்தியா,கொரோனா

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,208 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,867 ஆக உள்ளது.

மேலும் இதுவரை மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,697,11 ஆக பதிவாகியுள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் இதுவரை மட்டும் 2,20,65,99,034 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,553 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|