Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாநிலத்தில் வருகிற 30-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த மாநிலத்தில் வருகிற 30-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 23 Mar 2023 4:50:52 PM

இந்த மாநிலத்தில் வருகிற 30-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

தெலுங்கானா: இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆண்டுதோறும் சைத்ரா நவராத்திரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டு சைத்ரா நவராத்திரி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மக்கள் துர்க்கை அம்மனுக்கு வழிபட்டு விரதம் மேற்கொண்டனர். எனவே இதனை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த சைத்ரா நவராத்திரியின் 9-ம் நாள் ராமர் பிறந்ததை குறிக்கும் ராம நவமி அனுசரிக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை முன்னிட்டு மார்ச் 30 -ம் தேதி தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது/

holiday,telangana ,விடுமுறை ,தெலுங்கானா

மேலும் தற்போது தெலுங்கானாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 24-ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளை இயக்க பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து ராம நவமியை முன்னிட்டு அளிக்கப்பட்ட விடுமுறை அரசு அலுவலர்களுக்கும் பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :