Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 20 மாதங்களில் 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது ... உயர்கல்வித்துறை அமைச்சர்

கடந்த 20 மாதங்களில் 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது ... உயர்கல்வித்துறை அமைச்சர்

By: vaithegi Wed, 11 Jan 2023 4:32:04 PM

கடந்த 20 மாதங்களில் 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது   ...    உயர்கல்வித்துறை அமைச்சர்

சென்னை: புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் ...... தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது உயர் கல்வித்துறை சார்பாக தமிழகத்தில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எனவே அதன்படி முதல் கட்டமாக திருச்சி, கிருஷ்ணகிரி புதுக்கோட்டை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. எனவே இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.

minister of colleges,higher education ,கல்லூரிகள் , உயர்கல்வித்துறை அமைச்சர்

மேலும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் உயர்கல்வியை எளிதாக பெறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 20 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக சட்டமன்றத்தில் உரையின் மீதான விவாதம் நடைபெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து அதில் கேள்வி நேரத்தின் போது சபாநாயகர் எனது தொகுதியில் ஒரு கல்லூரி கூட அமைக்கப்படவில்லை என்று கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எந்த தொகுதிகளில் இல்லையோ அங்கு முன்னுரிமை அடிப்படையில் கலை, அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

Tags :