Advertisement

ஆப்கானிஸ்தானில் கனமழை .. வெள்ளத்தில் சிக்கி 31 பேர் பலி

By: vaithegi Tue, 16 Aug 2022 06:33:07 AM

ஆப்கானிஸ்தானில் கனமழை  ..   வெள்ளத்தில் சிக்கி 31 பேர் பலி

ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பர்வான் மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. எனவே இந்த கனமழையின் காரணமாக பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து இழுத்து செல்லப்பட்டன.

afghanistan,heavy rain ,ஆப்கானிஸ்தான் ,கனமழை

இதை தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை மட்டும் வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து 100-க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். எனவே இதனால் பலி எண்ணிக்கை மென்மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Tags :