Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரிப்பு

கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரிப்பு

By: vaithegi Mon, 27 June 2022 3:16:41 PM

கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரிப்பு

தமிழகம்: கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெறுகின்றனர். 1 முதல் 8 ம் வகுப்பு வரை ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கலாம். இத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. அதன்படி பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருக்குது 1 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும். 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இடையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏப்ரல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

private schools,students,right to education act ,தனியார் பள்ளிகள்,மாணவர்கள் ,கல்வி உரிமை சட்டம்

இந்த ஆண்டு 8,234 தனியார் பள்ளிகளில் 94,000 இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இதற்காக 1.42 லட்சம் பேரிடம் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

அதில் 2.60 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பெற தகுதியுள்ளவை. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட இடங்களை தாண்டி அதிக விண்ணப்பங்கள் வந்திருப்பதால் கடந்த மே மாதம் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் சேர்க்கையும் அதிகரித்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tags :