Advertisement

சென்னையில் 31 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Mon, 15 June 2020 3:19:00 PM

சென்னையில் 31 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 3 லட்சம் 32 ஆயிரத்து 424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9520 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 31 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

india,coronavirus,tamil nadu,chennai ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 3,409 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,922 பேருக்கும், அண்ணாநகரில் 3,150 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 4,082 பேரும், தேனாம்பேட்டையில் 3,844 பேரும், திருவொற்றியூரில் 1,171 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,395 பேருக்கும், பெருங்குடியில் 594 பேருக்கும், அடையாறில் 1,809 பேருக்கும், அம்பத்தூரில் 1,105 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 624 பேருக்கும், மாதவரத்தில் 854 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 586 பேருக்கும், மணலியில் 448 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|