Advertisement

31 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கைதி உயிரிழப்பு

By: Nagaraj Mon, 10 Oct 2022 12:31:51 PM

31 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கைதி உயிரிழப்பு

கனடா: ஒன்றாரியோவில் கடந்த 31 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒன்றாரியோ மாகாணம் க்ராவென்ஹர்ஸ்ட்டின் பீவெர் கிரிக் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலையில் வைத்து டேவிட் பாவுல்ட்ஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலை, பாலியல் குற்றச் செயல் மற்றும் ஆயுத வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது.

கடந்த 1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரின் சடலம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


trial,imprisonment,court,punishment,death ,விசாரணை, சிறைக்கைதி, நீதிமன்றம், தண்டனை, மரணம்


Tags :
|
|