Advertisement

பலத்த மழை காரணமாக சென்னையில் 32 விமான சேவை பாதிப்பு

By: vaithegi Tue, 21 June 2022 7:06:33 PM

பலத்த மழை காரணமாக  சென்னையில் 32 விமான சேவை பாதிப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணியில் இருந்து பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியாதது.

பலத்த கனமழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 32 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் கனமழையால் நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

planes,heavy rain,hurricane ,விமானங்கள் ,கனமழை,சூறைக்காற்று

சென்னையில் இருந்து பாங்காக், கொழும்பு, டெல்லி, புனே, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 13 விமானங்கள் கனமழையால் புறப்பட்டு செல்லவில்லை. வானிலை சீரானதும் மீண்டும் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானங்கள் சிறிது தாமதமாக புறப்பட்டு சென்றன.

மேலும், மலேசியா, ஹைதராபாத், டெல்லி, பாங்காக் உள்பட 15 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியவில்லை. வானிலை சீரானதும் தரையிறங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் இருந்து வந்த விமானமும், துபாயில் இருந்து வந்த விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல் ஜெர்மனி நாட்டின் பிராங்பார்ட்டில் இருந்து சென்னை வந்த விமானமும், தோகாவில் இருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாததால் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் வானிலை சீரானதும் 4 விமானங்களும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தன.

Tags :
|