Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலுக்குள் வீசி கடத்த முயன்ற ரூ.3600 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கடலுக்குள் வீசி கடத்த முயன்ற ரூ.3600 கோடி போதைப் பொருள் பறிமுதல்

By: Nagaraj Tue, 18 Apr 2023 7:52:42 PM

கடலுக்குள் வீசி கடத்த முயன்ற ரூ.3600 கோடி போதைப் பொருள் பறிமுதல்

இத்தாலி: என்ன ஒரு வில்லத்தனம்... நாயகன் சினிமா பட பாணியில், கடலுக்குள் வீசி கடத்த முயன்ற மூவாயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் இத்தாலி அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் மாஃபியாவுக்கு புகழ்பெற்ற சிசிலி தீவின் அருகே கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை போலீசார், நீரில் ஏதோ ஒரு கருவி மினுமினுத்துக் கொண்டு இருந்ததைக் கண்டனர்.

italy,narcotics,gangs,customs police,2 tons ,இத்தாலி, போதைப் பொருள், கும்பல், சுங்க போலீஸ், 2 டன்

அருகே சென்று பார்த்த போது, மீன்பிடி வலைகளுக்குள் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி கொக்கைன் போதைப் பொருள் இருந்ததைக் கண்டனர்.

இந்திய ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் பெருமானமுள்ள அந்த போதைப்பொருள், மொத்தம் 2 டன் அளவுக்கு இருந்ததாகவும், அதை கடத்த முயன்ற போதைப் பொருள் கும்பலை தேடி வருவதாகவும் இத்தாலி சுங்கப் போலீஸ் தெரிவித்துள்ளது.

Tags :
|
|