இலங்கையில் கொரோனாவிலிருந்து 369 பேர் குணமடைந்தனர்
By: Nagaraj Thu, 26 Nov 2020 7:42:21 PM
கொரோனாவிலிருந்து 369 பேர் குணமடைந்தனர்... இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரையில் 21 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 5 ஆயிரத்து 557 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 96 பேர் இதுவரை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags :
corona |
treated |