Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் ஒரே நாளில் 3,720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நாட்டில் ஒரே நாளில் 3,720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

By: vaithegi Wed, 03 May 2023 3:34:39 PM

நாட்டில் ஒரே நாளில் 3,720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியா: தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவ தொடங்கியது . இதனை அடுத்து நாளொன்றுக்கு 10,000- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த சூழலில் மீண்டும் நாடு ஒரு ஊரடங்கை சந்திக்க நேரிடுமோ? என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் எழுந்தது. மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே இதன் விளைவாக தற்போது கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

corona,infection ,கொரோனா ,தொற்று

இதனை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த வார பாதிப்புகளை விட குறைவு.

மேலும் அத்துடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதை யடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,584 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40,177 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|