Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூடானில் சிக்கியிருந்த இந்தியர்கள் உட்பட 28 நாடுகளை சேர்ந்த 388 பேர் மீட்பு

சூடானில் சிக்கியிருந்த இந்தியர்கள் உட்பட 28 நாடுகளை சேர்ந்த 388 பேர் மீட்பு

By: Nagaraj Mon, 24 Apr 2023 7:21:55 PM

சூடானில் சிக்கியிருந்த இந்தியர்கள் உட்பட 28 நாடுகளை சேர்ந்த 388 பேர் மீட்பு

பிரான்ஸ்: 388 பேர் மீட்கப்பட்டனர்... சூடானில் சிக்கியிருந்த இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 11 நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோதலால், பொதுமக்கள் சுமார் 400 பேர் பலியாகியுள்ளனர்.

அனைத்து நாடுகளும் தங்களது மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றியது.

indians,military aircraft,germany,italy,canada ,இந்தியர்கள், ராணுவ விமானங்கள், ஜெர்மனி, இத்தாலி, கனடா

அதேபோல், நேற்று இரவு இந்தியர்கள் உட்பட 388 பேரை இரண்டு இராணுவ விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்டதாக, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்தது.

இதேபோல் சவுதி அரேபியாவும் 3 இந்தியர்கள் உட்பட நட்பு நாடுகளை சேர்ந்த 66 பேரை மீட்டுள்ளது. ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஸ்பெயின் உட்பட பல நாடுகள் தங்களது அதிகாரிகள் மற்றும் குடிமக்களை மீட்டு வருகின்றன.

சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையின் இரண்டு C-130J ராணுவ விமானங்களும், சுமேதா ரோந்துக்கப்பலும் தயார்நிலையில் உள்ளன.

Tags :
|