Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தால் 39 பேர் பலி, 14 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தால் 39 பேர் பலி, 14 பேர் படுகாயம்

By: vaithegi Thu, 14 July 2022 08:05:08 AM

ஆப்கானிஸ்தானில்  மழை வெள்ளத்தால்  39 பேர் பலி, 14 பேர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களில் கடந்த இரு தினங்களாகவே இடைவிடாது தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அவ்விரு மாகாணங்களிலும் பெரும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதோடு மட்டும் அல்லாமல் சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

flood,rain ,வெள்ளம்,மழை

இந்த கனமழை, வெள்ளத்தால் அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும் இதில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இந்நிலையில் கனமழைக்கு 9 சிறுவர்கள் உள்பட 39 பேர் பலியானதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|