வெளிநாடுகளிலிருந்து சிக்கி தவித்த 394 இலங்கையர் நாடு திரும்பினர்
By: Nagaraj Sat, 01 Aug 2020 3:19:55 PM
394 இலங்கையர்கள் நாடு திரும்பினர்... வெளிநாடுகளிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
349 இலங்கையர்கள் இவ்வாறு இன்று காலை இரண்டு விமானங்களின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திதை வந்தடைந்துள்ளனர். முதலாவது விமானம் இன்று அதிகாலை 12 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 335 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து, அதிகாலை 1.30 மணியளவில், கட்டார், டோஹாவில் வணிகக் கப்பல்களில் வேலை செய்வதற்காக சென்ற 14 இலங்கையர்கள், கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும், இலங்கையில் சீன முதலீட்டு திட்டங்களில் பணிபுரியும் 29 சீன நாட்டு
பிரஜைகள் நேற்று மாலை 6.30 மணிக்கு சீனாவின் ஷாங்காயில் இருந்து சீனா
ஈஸ்டன் விமானத்தில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு
காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள் அனைவரும்
பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்கு
தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.