- வீடு›
- செய்திகள்›
- தருமபுரில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
தருமபுரில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
By: vaithegi Wed, 02 Aug 2023 10:36:38 AM
தருமபுரி: ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு ....... தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது உண்டு.
மேலும் இது தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மற்றும் விடுமுறை விடப்படுகிறது.
அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாந்தி பிறப்பித்து உள்ள உத்தரவில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவன்று விடுமுறை விடப்படுவதாகவும்,
மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.