இந்த மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை
By: vaithegi Tue, 01 Aug 2023 10:41:06 AM
ஈரோடு : சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை ...
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் வருகிற ஆகஸ்ட் 3 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. எனவே இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இதற்கு ஈடாக வருகிற 12ம் தேதியன்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
Tags :