3-வது நபராக, கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
By: vaithegi Sat, 23 July 2022 06:02:35 AM
திருவனந்தபுரம்: குரங்கு அம்மை நோய், ஆப்பிரிக்க நாடுகள் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா என பரவி கொண்டு வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் கால் பதித்து விட்டது.
இதனை தொடர்ந்து கேரளாவில் 2 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 3-வது நபராக, அங்கு மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதி கேரளா வந்த மலப்புரத்தை சேர்ந்த 35 வயது ஆணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அவர் மஞ்சேரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலை இயல்பாக உள்ளது" என தெரிவித்தார். அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும்மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.