Advertisement

தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை

By: vaithegi Sun, 15 Oct 2023 3:01:37 PM

தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை

தஞ்சாவூர் : ராஜராஜ சோழனின் 1,038 வது சதய விழா மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை ... தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து உள்ள உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடப்பு ஆண்டு ராஜராஜ சோழனின் 1,038- வது சதய விழா கொண்டாடப்படவுள்ளது.

எனவே இதனை முன்னிட்டு கோயிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

continuous vacation,thanjavur ,தொடர் விடுமுறை,தஞ்சாவூர்

இந்த உள்ளூர் விடுமுறையை சேர்த்து மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளது .

அதாவது வருகிற அக்டோபர் 22ம் தேதி வழக்கமான ஞாயிறு விடுமுறை மற்றும் அக்டோபர் 23, ஆயுத பூஜை அக்டோபர் 24 விஜயதசமி, அடுத்ததாக அக்டோபர் 25 ராஜராஜ சோழனின் சதய விழா முன்னிட்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

Tags :