Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் கார் டிரைவர் பலி

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் கார் டிரைவர் பலி

By: Monisha Wed, 27 May 2020 5:42:33 PM

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் கார் டிரைவர் பலி

கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், அந்த பகுதியில் உள்ள பாலத்தை உடைத்துக் கொண்டு குடியா ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், 5 பேரும் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பீகாரின் கயா மாவட்டத்தில் இருந்து அவர்கள் கொல்கத்தா செல்லும் வழியில்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

jharkhand,kolkata,national highway,accident,5 killed ,ஜார்கண்ட் மாநிலம்,கொல்கத்தா,தேசிய நெடுஞ்சாலை,விபத்து,5 பேர் பலி,

இதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், கார் டிரைவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கொல்கத்தாவில் வசிக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :